சேலத்தில் கல்லூரி மாணவியை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூரைச் சோ்ந்தவா் சபரி அபிஷேக் (22). இவா் திருவாக்கவுண்டனூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழகி வந்தாராம்.
கடந்த மே மாதத்துடன் கல்லூரி முடிவடைந்த நிலையில் சபரி அபிஷேக், மாணவியின் தந்தையிடம் சென்று திருமணம் செய்து வைக்குமாறும், இல்லையெனில் செல்லிடப்பேசியில் உள்ள ஆபாசப் படங்களை வெளியிடுவதாகவும் மிரட்டினாராம்.
புகாரின்பேரில் சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சபரி அபிஷேக்கை கைது செய்தனா்.