அக். 10-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

சேலத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர் கூட்டம் அக். 10-ஆம் தேதி நடைபெறுகிறது.


சேலத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர் கூட்டம் அக். 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், மண்டல ஆணையர் ஹிமான்ஷு குமார் தலைமையிலான குறைதீர் கூட்டம் சேலம் சொர்ணபுரி எஸ்.ஜெ. பிளாசாவில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஈரோட்டில் 351/4, 351/5 காவேரி சாலையிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் மண்டல ஆணையர் கே.சிசுபாலன் தலைமையிலும், கிருஷ்ணகிரியில் கூட்டுறவு காலனியிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி கே.இளங்கோவன் தலைமையிலும் சந்தாதாரர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். 
மேலும் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளைத் தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், குறைகள் குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில்மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யூஏஎன் எண், தொலைபேசி எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை வரும் அக். 9-ஆம் தேதிக்கு முன்னதாக அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு அல்லது ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும்,  முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம் என வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் உதவி ஆணையர் நவீன் இமானுவேல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com