வடகுமரை ஸ்ரீஸ்ரீ அப்பண்ண சுவாமிகளின் 57-ஆம் ஆண்டு ஆராதனை விழா சனிக்கிழமை வெகு விமரிசையாகநடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள வடகுமரையில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ அப்பண்ண ஸ்வாமிகளின் 57-ஆம் ஆண்டு ஆராதனை விழா வெள்ளிக்கிழமை மாலை தேவாரம், திருவாசகம், திருமுறைப் பாடல்கள் பாடப்பட்டு நள்ளிரவு வரை தின்மநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதனையடுத்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை, ஹோமம், ருத்ரஜபம், மஹன்யாஸம், பாராயணம், 9 மணிக்கு ஆஸ்ரமத்தில் அபிஷேகம், நாமசங்கீர்த்தனம், மகா தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமிகள் சித்தியான தியான நேரம், மங்களஹரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை கெளரவத் தலைவர் ஈ.எஸ்.ஆர்.அப்பண்ண சுவாமி, தலைவர் ஏ.சுப்பராமன், பொருளாளர் எஸ்.சாம்பமூர்த்தி அய்யர், செயலர் ஜி.சுப்ரமணியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.