ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெறும் விழாவில் காந்தி நகரில் உள்ள நகராட்சி பூங்காவில் வேம்பு, நாவல், புங்கன் மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். ஓய்வுபெற்ற முன்னாள் மாவட்ட வன அலுவலர் மணி மரம் நடுதல் குறித்த பலன்களை விளக்கிப் பேசினார். முகாமில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ. மோகன், உறுப்பினர்கள் வி.முஸ்தபா, ராஜமாணிக்கம், மக்பூல்பாஷா, ஆசிரியை அம்சவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.