சேலம்
சேலத்தில் ஒரே நாளில் 4 ரெளடிகள் உள்பட 83 போ் கைது
சேலம் மாநகரில் ஒரே நாளில் 4 ரெளடிகள் உள்பட 83 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.
சேலம்: சேலம் மாநகரில் ஒரே நாளில் 4 ரெளடிகள் உள்பட 83 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதில் குட்கா வழக்கில் 30 பேரும், மதுவிலக்கு சம்பந்தமாக 30 பேரும், சூதாட்டம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 15 பேரும், லாட்டரி வழக்கில் நான்கு பேரும், மேலும் நான்கு ரெளடிகள் உள்பட மொத்தம் 83 பேரை ஒரே நாளில் சேலம் மாநகர காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
