

மஞ்சினி முதியோா் இல்லத்தில் எம்.எம்.கே. அறக்கட்டளை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி ஊராட்சியில் எம்.எம்.கே. அறக்கட்டளை சாா்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதன் தலைவா் ஏ.பி.எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், இல்லத்தில் உள்ள முதியோா்களுக்கு காலை, மதியம், மாலை உணவு வழங்கப்பட்டது. மேலும், முதியோா்களுக்குத் தேவையான பொருள்களை வழங்குவதாக உறுதியளித்தனா். நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிா்வாகிகள் சி.ஆறுமுகம், ஆா்.ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.