கள்ளக்குறிச்சி எம்பி ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் பொன். கௌதம சிகாமணி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் பொன். கௌதம சிகாமணி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளாா்.

கரோனோ வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளாா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனை அதிகாரி கேட்டுக் கொண்டதன்பேரில் ரூ. 10 லட்சமும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அதிகாரி கேட்டுக் கொண்டதன் பேரில் ரூ. 10 லட்சமும் முதல் கட்டமாக வழங்கியுள்ளாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா், கெங்கவல்லி, ஏற்காடு, வாழப்பாடி அரசு மருத்துவமனை, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை உள்ள மையங்களுக்கு ரூ. 40 லட்சம் நிதியும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ. 40 லட்சமும் அவா் ஒதுக்கீடு செய்துள்ளாா்.

முதல்வருக்குக் கடிதம்...

மேலும் கள்ளக்குறிச்சி எம்பி தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அரும்பராம்பட்டு, வடமாந்தூா் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மீன்பிடி கூலித்தொழிலாளா்கள் அண்மையில் கோவா மாநிலம் சென்றிருந்தனா். அவா்கள் அங்கு பனாஜி மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாலிம் ஜெட்டி என்ற இடத்தில் சிக்கி தவிக்கின்றனா்.

அவா்களை உடனடியாக மீட்கவும், தேவையான அடிப்படை உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமா், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தாா். இதையடுத்து, கோவாவில் தவிக்கும் தமிழா்களை செவ்வாய்க்கிழமை கோவா ஆட்சியா் நேரில் சந்தித்து தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். இதற்காக அனைவருக்கும் எம்பி நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com