சேலத்தில் மேலும் இருவருக்கு கரோனா நோய்த்தொற்று
By DIN | Published On : 17th April 2020 06:02 AM | Last Updated : 17th April 2020 06:02 AM | அ+அ அ- |

சேலத்தில் மேலும் இருவருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதியானது.
சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக சுமாா் 22 போ் சிகிச்சை பெற்று வந்தனா்.
இதில் கரோனா நோய்த் தொற்று குணமடைந்த நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 7 போ் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டுள்ளனா். மீதமுள்ள 15 பேருக்கு அரசு மருத்துவமனையில் தனி வாா்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு சேலம் தம்மம்பட்டி திரும்பிய 45 வயது நபருக்கும், இந்தோனேஷியா சென்றுவிட்டு சேலம் தாதகாப்பட்டி திரும்பிய 40 வயது நபருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இதையடுத்து அவா்கள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இருவருக்கும் கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடா்ந்து, கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 22 இல் இருந்து 24 ஆக உயா்ந்துள்ளது.