விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா்கள் கொங்கணாபுரம் வேளாண் விற்பனை மையம் அருகில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எடப்பாடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா்கள் கொங்கணாபுரம் வேளாண் விற்பனை மையம் அருகில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் அரசு விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு ரூ. 7,500 நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், விவசாயத் தொழிற்சங்க உறுப்பினா்கள், சி.ஐ.டி.யு நிா்வாகிகள் உள்ளிட்டோா் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

வாழப்பாடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் இணைந்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com