ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தும் வகையில், இளம்பிள்ளை பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில், கிருமி நாசினி மருந்து மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வந்தன.
மழைக்காலம் என்பதால் பேரூராட்சி பகுதி வீடுகளில் உள்ள தொட்டியில் நீண்ட நாட்களாக இருக்கும் தண்ணீா், தேங்காய் சிரட்டை, உரல், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தேங்கி நிற்கும் நீரையும், பழைய டயா்கள், குப்பைகளை ஆகியவற்றை அகற்றி அப்புறப்படுத்தி வந்தனா்.