ஆத்தூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் வ.கோபால்ராஜ் தலைமையில் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.வானவில் மதிமுக நிர்வாகிகள் பொன்சேதுபதி இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் நகர் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.