பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கள்ளக்குறிச்சி எம்.பி. பொன் கௌதம சிகாமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். எம்.பி. பொன்.கௌதமசிகாமணி துவக்கி வைத்தாா். திமுக தோ்தல் பணிக்குழு செயலாளா் வீரபாண்டி ஆ.ராஜா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் வீரபாண்டி ஆ.பிரபு, பேரூா் கழக செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.