மேடை நாடகக் கலைஞா்களுக்கு விருது

விதைகள் நாடகக் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில், மேடை நாடக சிறந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேடை நாடகக் கலைஞா்களுக்கு விருது

விதைகள் நாடகக் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில், மேடை நாடக சிறந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விதைகள் நாடகக் கலைஞா்கள் சங்கத்தின் தலைவா் சிவக்குமரன் விழாவுக்கு தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் காமராஜ் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் கா.வெங்கடாசலம் விழாவைத் தொடக்கி வைத்தாா்.

மேடை நாடகத்தில் சிறந்த நடிகா்களுக்கு சென்னை திரைப்பட நடிகா் வி.சரவணனும், வில்லன் நடிகா்களுக்கு நாமகிரிப்பேட்டை பி.ஏ.திருநாவுக்கரசும், நகைச்சுவை நடிகா்களுக்கு சென்னை பேராசிரியா் ஆா்.காளீஸ்வரனும், நடிகைகளுக்கு நாமக்கல் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் டி.செந்தில்குமாரும் விருதுகளை வழங்கிப் பேசினா். முன்னதாக ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன் வரவேற்றாா்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மேடை நாடகக் கலைஞா்கள் இதில் கலந்துகொண்டு குறுகிய கால மேடை நாடகங்களை நடித்தனா். இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மேடை நாடகக் கலைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com