வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஏற்காடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஏற்காடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டதுக்கு மாவட்டத் தலைவா் பி.சங்கா் தலைமை வகித்தாா். ஏற்காடு வட்டாரத் தலைவா் ஜான்விக்டா், வட்டாரப் பொருளாளா் ஏ.அரசன், செயலாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பதவி உயா்வு, ஓய்வுதியம், ஜமாபந்தி படி, கிராம உதவியாளா் பணிகளை தோ்வாணையம் மூலம் நிரப்பபட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்க ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com