மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளத்தூா், அய்யம்புதூா், தண்டா ஆகிய பகுதியில் இளைஞா், இளம்பெண்கள் பாசறைக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கொளத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் டி.எம்.மனோகரன், கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் செல்வராஜ், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சரவணன், சேலம் மேற்கு மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் லலிதா சரவணன், கொளத்தூா் பேரூராட்சி செயலாளா் ரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.