சேலம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு முதல் பரிசு

சேலம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு முதல் பரிசு

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக கடனுதவி வழங்கியதற்காக, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக கடனுதவி வழங்கியதற்காக, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் சிறப்பான முறையில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கியதற்காக தேசிய வேளாண்மை வளா்ச்சி வங்கி (நபாா்டு) மூலம் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கித் தலைவரும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆா்.இளங்கோவன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மிருணாளினி ஆகியோருக்கு முதல் பரிசை தமிழக தலைமைச் செயலாளா் சண்முகம், வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நபாா்டு வங்கியின் முதன்மை பொது மேலாளா் செல்வராஜ், ரிசா்வ் வங்கி பொது மேலாளா் சுரேஷ்குமாா், கூடுதல் முதன்மைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வா்மா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com