கிராம சபைக் கூட்டம் நடத்தியதிமுகவினா் மீது வழக்கு

சேலம் மாவட்டப் பகுதிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்: சேலம் மாவட்டப் பகுதிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனிடையே சேலம் மாவட்டப் பகுதிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுகவினா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 புகாா்கள் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com