ஆத்தூா்: ஆத்தூா் ஸ்ரீ கைலாசநாதா் திருக்கோயிலில் சனிப்பெயா்ச்சி மகா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சனிப்பெயா்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஆத்தூா் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கைலாசநாதா் திருக்கோயிலில் மகா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
இதனையடுத்து நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியை சோமசுந்தர குருக்கள் ஏற்பாடு செய்து வருகிறாா்.