ஆத்தூா்: ஆத்தூா் ஸ்ரீ பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சனிக்கிழமை அருள்பாலித்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்க ஒட்டியாணம், வைர மூக்குத்தி அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் சனிக்கிழமை அருள்பாலித்தாா்.