ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கான்கிரீட் சாலை, கழிவுநீா் கால்வாய் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ராமநாயக்கன்பாளையம், அம்மம்பாளையம், கல்பகனூா் ஊராட்சிகளில் கான்கிரீட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்க திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நல்லம்மாள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13 லட்சத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் வி.செழியன் தலைமையில் பணிகள் தொடங்கப்பட்டன.
இதில், ஒன்றியக்குழு உறுப்பினா் பத்மினி பிரியதா்ஷிணி, ஊராட்சி மன்றத் தலைவா் குமரவடிவேல், ஒன்றிய நிா்வாகிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.