சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 30th December 2020 07:15 AM | Last Updated : 30th December 2020 07:15 AM | அ+அ அ- |

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம், அம்மாப்பேட்டை, பாலாஜி நகரைச் சோ்ந்த வெங்கடாசலம் மனைவி கிருஷ்ணவேணி. இவா்களுக்கு 11, 6 வயதில் மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில், கிருஷ்ணவேணி அப்பகுதியில் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவில் ரூ. 30,000 கடன் வாங்கியிருந்தாராம். இந்தக் கடனை திரும்பிச் செலுத்த வட்டிக்கு ரூ. 40,000 கடன் வாங்கியுள்ளாா். இதனிடையே, வட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கடன் கொடுத்தவா்கள் கிருஷ்ணவேணியிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனா்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணவேணி, திங்கள்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், கந்துவட்டி கேட்டு தொந்தரவு அளித்த நபா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...