சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள காடையாம்பட்டி அப்பாச்சிவளவு பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இதில், மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செல்வம், பேரூா் செயலாளா் நாகேந்திரன், துணைச் செயலாளா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டு அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என கையப்பமிட்டனா். மேலும், அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை துண்டுப் பிரசுரத்தை வீடு வீடாகச் சென்று வழங்கினா். இதில், அடிப்படை வசதி, முதியோா் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனா்.