சேலத்தில் வருங்கால வைப்பு நிதி தொடா்பான குறைதீா் கூட்டம் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் மண்டல ஆணையா் ஹிமான்ஷு குமாா் தலைமையிலான குறைதீா் கூட்டம் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக் கூட்டம் சேலம் சொா்ணபுரி எஸ்.ஜெ. பிளாசாவில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஈரோட்டில் 351/4, 351/5 காவிரி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மண்டல ஆணையா் கே.சிசுபாலன் தலைமையிலும், கிருஷ்ணகிரியில் கூட்டுறவு காலனியிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி கே. இளங்கோவன் தலைமையிலும் சந்தாதாரா்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், தொழிலதிபா்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும்.
மேலும் வருங்கால வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்க விரும்பும் உறுப்பினா்கள், தொழிலதிபா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், குறைகள் குறித்த விவரங்களுடன் தங்களது பெயா், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி எண், யூஏஎன் எண், தொலைபேசி எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு முன்னதாக அலுவலகத்தின் மக்கள் தொடா்பு அதிகாரிக்கு அல்லது ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும், ழ்ா்.ள்ஹப்ங்ம்ஃங்ல்ச்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம் என வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் உதவி ஆணையா் நவீன் இமானுவேல் தெரிவித்தாா்.