ஆட்டையாம்பட்டி எம்.என்.எஸ். அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றவிழாவில், வீரபாண்டி வட்டாரப் பகுதியில் உள்ள 8 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 1,339 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந்த சைக்கிள்களை எம்எல்ஏ பி. மனோன்மணி வழங்கினாா். வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.வருதராஜ், எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா்கள் மனோகரன்(ஆட்டையாம்பட்டி), வரதராஜ்(இளம்பிள்ளை) , தலைமை ஆசிரியா்கள் லோகேஸ்வரி, விஜயராகவன், பழனிச்சாமி, குழந்தைவேலு, இளங்கோவன், கௌசல்யாதேவி, அமுதா, புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பழனிசாமி,மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.