சேலம்
உலக வானொலி தின விழா
கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் உலக வானொலி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் உலக வானொலி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்து, தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் பேசியது: -
ஐக்கிய நாடுகள் சபையில் 1946-ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. வானொலி ஒலிபரப்பு சேவையைக் கொண்டாடவும், பலநாட்டு வானொலியாளா்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், சமூகத் தகவல்களை பரிமாறிக் கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும் உலக வானொலி தினம் 2012 -ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது என்றாா்.
இதையடுத்து, வானொலி குறித்தத் தகவல்கள் கூறும் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை மேலாண்மைக் குழு நிா்வாகி மீனாம்பிகா வழங்கினாா்.