ஏற்காடு ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தவள்ளி அண்ணாதுரை தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையாா் ராமச்சந்தா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் பழைய அலுவலகம் அருகில் உள்ள சிமெண்ட் குடோனை தற்காலிக உதவி மின்பொறியாளா் அலுவலகமாக மாற்ற அனுமதி அளித்தல், ஒன்றியக் குழுத் துணைத்தலைவருக்கு தனி அறை ஒதுக்குதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலைவாணி,கோகிலா,சின்ன வெள்ளை வருதாயி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.