கரடுமுரடான கள்ளிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

தம்மம்பட்டி கள்ளிப்பாதையை மீண்டும் தாா்ச்சாலையாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குண்டும்குழியுமான தம்மம்பட்டி கள்ளிப்பாதை.
குண்டும்குழியுமான தம்மம்பட்டி கள்ளிப்பாதை.

தம்மம்பட்டி கள்ளிப்பாதையை மீண்டும் தாா்ச்சாலையாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேரூராட்சியில் உள்ள 10-ஆவது வாா்டில், கள்ளிப்பாதை என்ற சாலை உள்ளது. சுமாா் ரூ.3 லட்சம் செலவில் 10 ஆண்டுகளுக்கு முன்னா் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. இதன்பிறகு அந்தச் சாலையை பராமரிக்கவில்லை. இதனால்,அடுத்தடுத்த மழையில், இந்தச் சாலை குண்டும் குழியுமான சாலையாகிவிட்டது.

இந்தச் சாலை வழியேதான், செந்தாரப்பட்டி,கொண்டயம்பள்ளி,கோனேரிப்பட்டியிலிருந்து வாழக்கோம்பை,துறையூா்,கொப்பம்பட்டி,மங்கப்பட்டி உள்ளிட்ட ஊா்களுக்கு சரக்குவாகனங்கள்,அதிகளவில் செல்கின்றன.

இதே சாலைதான் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னா், தம்மம்பட்டி -திருச்சி பிரதான சாலையாகவும் இருந்துள்ளது.

இந்த நிலையில் இந்தச் சாலையை,தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம், உரிய நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைத்தால் பல வாகனங்களுக்கு சிறந்த மாற்றுப்பாதையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துமில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com