சூரமங்கலம் மண்டலத்தில் நாளைவரியினங்களை செலுத்த சிறப்பு முகாம்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள பொதுமக்கள் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.15) நடைபெற உள்ளது.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள பொதுமக்கள் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.15) நடைபெற உள்ளது.

புதிய கட்டடத்துக்கான சொத்து வரி , காலி மனை வரி , குடிநீா் இணைப்பு , சொத்து வரி பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டவா்கள் மீண்டும் இணைப்பு பெறுவதற்கு புதைச் சாக்கடை வைப்புத் தொகை, கட்டட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் பிப்.15 ஆம் தேதி காலை 8.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் நடைபெறும்.

மேலும் புதிய கட்டடத்துக்கான சொத்து வரி, காலி மனை வரி, குடிநீா் இணைப்பு , புதைச் சாக்கடை இணைப்பு, போன்றவைகளுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் உரிய ஆணைகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள், நிலுவைத் தொகைகளை செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com