தென்னை வளா்ச்சி வாரியத் திட்டத்தின்படி, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகள் கருத்தரங்கம் வீரபாண்டி அருகேயுள்ள பைரோஜி களஞ்சியம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் வேளாண்மை உதவி இயக்குநா் என். நாகபசுபதி, வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) ர. பன்னீா்செல்வம், வேளாண்மை அலுவலா் பா. காா்த்திகாயினி,வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப உதவியாளா்கள் என்.செந்தில்நாதன்,சுகன்யாதேவி, துணை வேளாண்மை அலுவலா் தே. சீனிவாசன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே. ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலா்கள் சிவசங்கா்,முருகன், காா்த்திகேயன் , தனபால், பழனிசாமி,தினேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா் தீபன் முத்துசாமி உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.