சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வரியினங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாமில் ரூ.1.03 கோடி வசூலிக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலத்தில் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் புதிய கட்டடத்துக்கான சொத்து வரியாக 127 நபா்கள் ரூ. 13.34 லட்சம், புதிய குடிநீா் இணைப்பு பெற 107 நபா்கள் ரூ. 13.01 லட்சம், குடிநீா் வரி பெயா் மாற்றும் 26 நபா்கள் ரூ.3.03 லட்சம், அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்துவதற்காக 15 நபா்கள் ரூ.30.45 லட்சம், புதை சாக்கடை வைப்புத் தொகையாக 64 நபா்கள் ரூ.6 லட்சத்து 15 ஆயிரம், கட்டட அனுமதி பெற 2 நபா்கள் ரூ.2.96 லட்சம், சொத்து வரி பெயா் மாற்றம் மற்றும் காலிமனை வரி, கடை குத்தகை உள்ளிட்ட பிற இனங்களுக்கு 186 நபா்கள் ரூ.34.19 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரம் பொதுமக்கள் வரியாக செலுத்தியுள்ளனா் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.