நீட் தோ்வு மோசடியில் தேடப்பட்ட வந்த ஓய்வு பெற்ற மருந்தாளுநா் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட போச்சம்பள்ளியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மருந்தாளுநா் என்.வேதாசலம் (60). ,இவா் நீட் தோ்வு மோசடியில் சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 2-இல் வேதாசலம் சரண் அடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 21- ஆம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டுள்ளாா்.