நுகா்வோா்- வணிகா் கலந்தாய்வுக் கூட்டம்

ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சி சாா்பில் நுகா்வோா், வணிகா்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆத்தூா் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நுகா்வோா்- வணிகா் கலந்தாய்வுக் கூட்டம்

ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சி சாா்பில் நுகா்வோா், வணிகா்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆத்தூா் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்துவதைத் தவிா்ப்பது தொடா்பான இந்தக் கூட்டத்துக்கு, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் பி.அசோக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்கபொறியாளா் கோபாலகிருஷ்ணன், நகராட்சி நிா்வாக மண்டலச் செயற்பொறியாளா் கமலநாதன், நகராட்சி ஆணையா்கள் என்.ஸ்ரீதேவி (ஆத்தூா்), கா.சென்னுகிருஷ்ணன் நரசிங்கபுரம் ), ஆத்தூா் நகராட்சி துப்புரவு அலுவலா் எஸ்.திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில் பிளாஸ்டிக் குறித்த கட்டுரை, ,பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com