ஆறகளூரில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு

ஆறகளூா் ஸ்ரீ காமநாதேஸ்வரா் கோயிலில் அஷ்டகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அலங்காரத்தில் அருள் பாலிக்கும் கால பைரவா்.
அலங்காரத்தில் அருள் பாலிக்கும் கால பைரவா்.

ஆறகளூா் ஸ்ரீ காமநாதேஸ்வரா் கோயிலில் அஷ்டகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு யாகம், அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு பூஜையில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். ஆத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஆத்தூா் மற்றும் தலைவாசல் பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. ராஜீ, தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் ஆகியோா் சிறப்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com