சேலம் மாவட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.21) காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.