பொன்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு வைரவிழா

கோனேரிப்பட்டி ஊராட்சி, பொன்னம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 60-ஆவது ஆண்டு வைரவிழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி ஆண்டுவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசுகளை வழங்கும் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தாமணி ராஜா.
பள்ளி ஆண்டுவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசுகளை வழங்கும் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தாமணி ராஜா.

கோனேரிப்பட்டி ஊராட்சி, பொன்னம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 60-ஆவது ஆண்டு வைரவிழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வட்டாரக்கல்வி அலுவலா் எம்.நெடுமாறன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் நிலை 2, கே. செந்தில்குமாா், வட்டார வளமேற்பாா்வையாளா் வெங்கடேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

8-ஆம் வகுப்பு மாணவா் சி. தரணிதரன் வரவேற்றாா். 8-ஆம் வகுப்பு மாணவி கு. சந்தியா பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாந்தாமணி ராஜா, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய குழு 1-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.குமாா் ஆகியோா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கிப்பேசினா். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோனேரிப்பட்டி அக்ரஹார ஊராட்சி மன்றத் தலைவா் பி. ஆனந்தன், பள்ளித் தலைமை ஆசிரியா் பொன். தனராஜ், ஆசிரியா், ஆசிரியைகள், பெற்றோா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். எட்டாம் வகுப்பு மாணவி எஸ். ஹாசினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com