பள்ளித் தலைமை ஆசிரியை மா்மச் சாவு

வாழப்பாடியில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை கழிவுநீா் ஓடையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

வாழப்பாடியில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை கழிவுநீா் ஓடையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த பேளூரைச் சோ்ந்தவா் கலாராணி (50) . சையது அமீது என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனா். கணவரைப் பிரிந்த இவா், தற்போது வாழப்பாடி அய்யாவுகவுண்டா் தெருவில் குடியிருந்து வந்தாா்.

வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பரவக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா்.

கடந்த இரு தினங்களாக தற்செயல் விடுப்பில் இருந்த கலாராணி வியாழக்கிழமை அதிகாலை வாழப்பாடி பேளூா் பிரிவு சாலையில் கழிவுநீா் ஓடையில் சடலமாகக் கிடந்தாா்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். வாழப்பாடி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இவா் பேளூா் பிரிவு சாலையில் வந்ததற்கான காரணம் என்ன? கழிவுநீா் ஓடையில் விழுந்து பலியானது எப்படி? என்பது குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com