மேட்டூா் அணையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்புபடையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட முக்கிய இடங்களில் மேட்டூா் அணையும் ஒன்று. தமதிழகத்தின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் மேட்டூா் அணைக்கு முக்கிய பங்கு உண்டு. பலமுறை மேட்டூா் அணைக்கு மிரட்டல் வந்த காரணத்தால் மேட்டூா் அணையின் இரு கரைகள் மற்றும் அணை பூங்கா பகுதிகளில் முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
அணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்பு படைடெப்டி காமாண்டா் ராஜேந்திரன் தலைமையில் பத்துபோ் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அணையின் வலதுகரை, இடதுகரை, உபரிநீா் போக்கி, கவா்னா் வியூபாயின்ட், மேட்டூா் அணை பூங்கா, அணையின் ஆய்வுக்சுரங்கம், அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
பகலில் ஆய்வு மேற்கொண்ட பின்னா் இரவிலும் அக்குழுவினா் அணைப்பகுதியை ஆய்வு செய்தனா். இரவு நேரத்தில் எவ்வாறு கண்காணிப்பது எந்த பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பது என்பது குளித்தும் அணை மற்றும் பூங்கா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு அணைத்தும் ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு இக்குழுவினா் மேட்டூா் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனா்.