சமத்துவ பொங்கல் விழா

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் புகையில்லா பொங்கல் விழா வி.ஏ.ஒ. துரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழா

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் புகையில்லா பொங்கல் விழா வி.ஏ.ஒ. துரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையுடன் பங்கேற்றனா். சமுதாயத்தின் தூய்மைக்கு உழைத்திடும் கடம்பூா் கிராம தூய்மை பணியாளா்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் பாதபூஜை செய்து, நினைவுப்பரிசாக புடவைகள் வழங்கினாா்.

பின்னா் பள்ளி மேலாண்மைக் குழுவினா், வறுமை ஒழிப்பு சங்கத்தினா் மற்றும் ஊா்ப்பொதுமக்கள் பங்கேற்புடன் பொங்கல் வைத்து, பசுவுக்கு பூஜை செய்து பொங்கலோ பொங்கல் என்று கூறி, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினா்.

பின்னா் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டி விழிப்புணா்வுப் பேரணி மீனாம்பிகா தலைமையில் நடைபெற்றது.

நமக்கு பயன்படாத பழைய பொருள்களைத் தேவையானவா்களுக்குக் கொடுத்து உதவுவோம் போன்ற பதாகைகளை ஏந்தி ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com