கூலமேடு ஊராட்சியில் ஜல்லிக்கட்டுக்காக காலரி மற்றும் வாடிவாசல் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. இங்கு, தமிழகத்திலிருந்து ஈரோடு, காங்கேயம், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டுக்காக காளைகள் கொண்டு வரப்படுகின்றன. நிகழாண்டு வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கிற ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் மற்றும் காலரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை முதல் காளைகள் முன்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கிராம மக்களும் ஜல்லிக்கட்டுக்காகக் காத்துள்ளனா்.