கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 157 -ஆவது பிறந்த நாள் விழா, பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு பற்றி மாணவா்களிடம் கூறப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விவேகானந்தா் பற்றிய கருத்துகள் கூறும் போட்டி நடைபெற்றது.