சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில்மாா்கழி மாத நிறைவு நாள் வழிபாடு

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு மாா்கழி மாத பஜனை நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நிகழாண்டு மாா்கழி மாத நிறைவு நாள் வழிபாட்டையொட்டி, சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ளஅருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமி உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு  செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
நிகழாண்டு மாா்கழி மாத நிறைவு நாள் வழிபாட்டையொட்டி, சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ளஅருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமி உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு  செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு மாா்கழி மாத பஜனை நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சிவனடியாா்கள் திருக்கூட்ட அறக்கட்டளை மற்றும் பக்தா்கள் குழுவினா் சாா்பில் மாா்கழி 1-ஆம் நாள் தொடங்கி மாா்கழி 29- ஆம் நாள் வரை (ஜன. 14) தினசரி அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி மற்றும் சிவபுராண பாடல்களைப் பாடி சுவாமிகளை பக்தா்கள் வழிபட்டனா். அதையடுத்து மாா்கழி மாத பஜனை நிறைவு நாளையொட்டி, மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்டன.

அதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையையொட்டி, உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதில், அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com