திருவள்ளுவா் தினத்தை (ஜன.16) முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுகூடங்கள் மூடப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50 உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின்படி திருவள்ளுவா் தினத்தை (ஜன.16) முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பாா்கள் மற்றும் ஹோட்டல் பாா்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.