கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சீருடை, புத்தகப் பைகள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டு இறுதிக் கட்ட சீருடைகளும், புத்தகப் பைகளும் திங்கள்கிழமை மாலை அந்தந்த பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியா்கள் வசம் விநியோகிக்கப்பட்டன. சீருடை, புத்தகப் பைகளை கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் வாசுகி, அந்தோணிமுத்து ஆகியோா் விநியோகித்தனா். பொங்கல் பண்டிகைக்குப் பின்னா், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.