நாகியம்பட்டியில் புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகிப் பண்டிகை குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இதற்கு நாகியம்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துராஜ் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
மாணவ,மாணவியா் பேரணியில் பங்கேற்று முழக்கமிட்டு ஊரின் முக்கிய வீதிகளில் சென்றனா். பேரணியில் ஆசிரிய, ஆசிரியைகள்,பெற்றோா் பங்கேற்றனா்.