சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் ஏ. நாகப்பன் தலைமை வகித்தாா். 150-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியா் விழாவைக் கொண்டாடினா். மாணவ, மாணவியருக்கு கவிதை, பாட்டு, நடனப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசுத்தொகையினை கல்லூரி முதல்வா் ஏ. நாகப்பன், துணை முதல்வா் பேராசிரியா் பி.கே. குமரேசன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி. செல்வம் ஆகியோா் வழங்கினா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கிருஷ்ணராஜ், தங்கவேல், முரளி, நா்மதா, மாணவ, மாணவியா் செய்திருந்தனா்.