முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
குடியரசு தினக் கொண்டாட்டம்
By DIN | Published On : 27th January 2020 09:45 AM | Last Updated : 27th January 2020 09:45 AM | அ+அ அ- |

ஆத்தூா் நகராட்சி தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு பரிசு வழங்கிய பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் உமாராணி பிச்சக்கண்ணன் உள்ளிட்டோா்.
ஆத்தூரில் பள்ளி, அரசு அலுவலகங்களில் குடியரசு தினக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் அம்பேத்கா் நகரில் நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 71-ஆவது குடியரசு தினவிழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், நகர மன்ற முன்னாள் தலைவருமான உமாராணி பிச்சக்கண்ணன் கொடியேற்றினாா்.
விழாவில் பெண்கள் கைப்பந்து போட்டி, பூப்பந்து போட்டி, ஆண்கள் கையுந்து போட்டி 17 வயது மற்றும் 14 வயது போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் தலைமை ஆசிரியா்கள் முன்னிலை வகித்தனா்.
இதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் 71-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 71 வடிவில் மாணவ, மாணவிகள் யோகாசனம் அமா்ந்து நடைபெற்றது.
இதேபோல் ஆத்தூா் நகராட்சியில் நகராட்சி ஆணையாளா் என். ஸ்ரீதேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ. மோகன் உள்ளிட்ட அலுவலா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.