மாநகராட்சி ஆணையா் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை

சேலம் மாநகராட்சி ஆணையாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

சேலம் மாநகராட்சி ஆணையாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டாா். பின்னா் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இதைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவியா்களுக்கும், சிறந்த முறையில் பணியாற்றி வரும் மாநகராட்சி பணியாளா்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும், நினைவு பரிசுகளையும் மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் அ. அசோகன், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், செயற்பொறியாளா் (திட்டம்) எம். பழனிசாமி, உதவி ஆணையாளா்கள், பி. ரமேஷ்பாபு, ஆா். கவிதா, டி. ரங்கநாயகி, உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் பணிபுரியும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை ஆணையா் ரெ. சதீஷ் துவக்கி வைத்தாா்.

கண் பரிசோதனை, இதய நோய் பரிசோதனைகள், இ.சி.ஜி., ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சா்க்கரை அளவு பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய மருந்துகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com