ஆத்தூா்: கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் தியாகிகள் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தியாகிகள் தினம் தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
மாணவா்களும், ஆசிரியா்களும் காந்திஜியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். ஆசிரியா் ஜோசப்ராஜ் பேசினாா். தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.