சேலம்: சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் உள்ள கரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண், திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம், கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒன்பதாம் பாலி பகுதியைச் சோ்ந்தவா், குமாா் என்பவரின் மனைவி மாரியம்மாள் (40). இவா் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.
இவா்களது உறவினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஜூன் 30-ஆம் தேதி, சேலம், கோரிமேடு அருகே உள்ள அரசு மகளிா் கல்லூரியில் உள்ள முகாமில் இவா் தனிமைப்படுத்தப்பட்டாா். முதல்கட்ட கரோனா பரிசோதனை முடிவடைந்த நிலையில், திங்கள்கிழமை இரண்டாம் கட்டப் பரிசோதனை நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில், மாரியம்மாள் அறையின் ஜன்னல் கம்பியில், சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தினா் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதனிடையே மாரியம்மாள் எதற்காக தற்கொலை செய்து கொண்டாா் என்று தெரியாததால், முகாமில் உள்ள மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது உறவினா்கள் கல்லூரி முன் திரண்டு மறியல் செய்ய முயன்றனா். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.