சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அரசநத்தம் ஊராட்சிக்கு மேட்டூர் குடிநீர் விநியோகத்தை ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி சனிக்கிழமை துவக்கிவைத்தார்.
அரசநத்தம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னை வெகுகாலமாக இருந்து வந்தது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமது தொகுதி நிதியில் இருந்து ரூ.5லட்சம் மற்றும் அரசநத்தம் ஊராட்சி பொதுநியில் இருந்து ரூ 1 லட்சம் நிதியுதவியுடன் 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய குடிநீர்க் குழாய் அமைத்து ஊராட்சிக்கு குடிநீர் விநியோகத்தை ஆர்.எம்.சின்னதம்பி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் லிங்கம்மாள்பழனிசாமி ஊராட்சிமன்றத்லைவர் சி.வெள்ளையன் துணைத்தலைவர் டி.ஜெய்சங்கர் உறுப்பினர்கள் முருகேசன் ராஜ்குமார் மல்லிகா சுமதி பாப்பாபெரியசாமி பேபி ஊராட்சி செயலாளர் ஜி.அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சட்டப்பேரவை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.